உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
37 பார்வைகள்

2017 ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருவது முரண்பாடானது என்று குறிப்பிட்ட தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோருகின்றார்கள். ஆனால், 2017 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமைச்சுப் பதவி வகித்த நல்லாட்சி அரசுதான் மாகாண சபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது. அன்றைக்கு அந்தப் பழைய தேர்தல் முறைமை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்கின்றார்கள்.

முறையற்ற மற்றும் மோசடியான பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அது முறையற்றதொரு அரச நிர்வாகமே தோற்றம் பெற வழிவகுக்கும். எனவே, தேர்தல் முறைமையில் உள்ள சட்டச் சிக்கல்களுக்கு முரண்பாடற்ற வகையில் முறையான தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

49 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

49 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரத் தடையால் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிக்கல்.!

திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்…

42 0 0
இலங்கை செய்திகள்

கொக்கைன் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 43…

42 0 0