உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி: 3,794 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
54 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களுக்கு இதுவரை பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் விவரங்கள் பின்வருமாறு:

பதியத்தலாவ: 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,910 குடும்பங்களின் 9,177 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகா ஓயா: 865 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாவிதன்வெளி: 3 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 19 குடும்பங்களின் 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிநடை அமைப்புச் சபை ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாகத் தேவையான நிதியை வழங்கி உடனடியாகக் குடிநீர் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்கள் வலுப்படுத்தப்பட்டு, அதிகரிக்கும் வெப்பநிலையினை எதிர்கொள்வதற்கான சமூக மட்ட அனர்த்த அபாய முகாமைத்துவத் திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை…

56 0 0
இலங்கை செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘போ@தைப்பொருள் லேகியம்’ விற்பனை : சந்தேக நபர்  கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

43 0 0
இலங்கை செய்திகள்

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சட@லம் அடையாளம் காணப்பட்டது!

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை அம்பாறை…

63 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு! அக்கரைப்பற்று, செப். 13ஜே.கே.யதுர்ஷன் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ…

60 0 0