உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

2016 ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
59 பார்வைகள்

2016ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா பெறுமதியான ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு, புதிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஹட்டன் நகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2016ஆம் ஆண்டு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதுவரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஹட்டன் நகர பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஹட்டன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களிடையே தற்போது ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயத்தை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொண்டு, எவ்வித தாமதமுமின்றி ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஹட்டன் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

44 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

29 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0