டித்வா புயலால் படகுகளை இழந்த மீனவர்களுக்கான மீன்பிடி படகுகள் வழங்கி வைப்பு.!
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி மற்றும் செபஸ்தியார்புரம் ஆகிய பகுதிகளில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டு கடற்தொழில் படகுகளை இழந்த தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கான மீன்பிடி படகுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி மற்றும் செபஸ்தியார் புரம் ஆகிய பகுதிகளில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டு கடற்தொழில் படகுகளை இழந்த இரண்டு மீனவர்களுக்கு. தலா ஏழு இலட்சத்து பதினான்காயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகுகள் இன்று (01-09-2026) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மீன்பிடி வள்ளங்களை வழங்கி வைத்துள்ளார்.
நிகழ்வில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர், கடற்தொழில் சங்கப் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கடற்தொழில் அமைச்சின் மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


