மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!
மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (31) பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் இதனை நாடு பூராகவும் ஏற்பாடு செய்த நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, ஆN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


