குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள டிக்கோயா வணராஜா தோட்ட மேற் பிரிவில் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு களைந்து கொட்டியதில் 14 பெண்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளை குளவிக் கூடு கலைந்து குளவி கொட்டியதில் மூன்று பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தொழிலாளி தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஏனைய இரண்டு பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.