நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!
சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம்.
நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சொகுசு AC பேருந்தில், நான்கு பேர் அமர வேண்டிய இருக்கையில் ஆறு பேர் அமர வைக்கப்படுவதாகவும், பேருந்து முழுவதும் பயணிகள் நெருக்கடியாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் நிலையில், அதற்கேற்ற இருக்கை வசதி, பயணிகள் நெரிசல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, பயணிகளுடன் முரண்படும் வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு AC பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் நிலை இதுதானா கவனத்திற்கு கொண்டு வந்தனர் பயணிகள்.
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா
பேருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படுகிறார்களா
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு யார் பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்து ஏற்படும் பட்சத்தில் இதற்கு பொறுப்பு கூறுவது யார் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தனியார் போக்குவரத்து சங்கமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த விடயத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பும், உரிய சேவையும் உறுதி செய்யப்பட வேண்டும்.


