உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
63 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் மூன்று இடையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர, ஓய்வூதியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் கே.சரத் லால் பெரேரா மற்றும் சட்டத்தரணி ஜானக அதிகாரி ஆகியோர் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சட்ட ரீதியாகவே நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஊடாக நிறைவேற்றலாம் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும் மனுதாரர்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராராச்சி 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முதலாவது இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

84 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

44 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

64 0 0