உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!

68 பார்வைகள்

எல்நினோ காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம், குடிநீர் மற்றும் இதர நீர் தேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோக வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது, கடந்த சிறுபோகப் பருவத்தில் முன்ஆயத்தத்துடன் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் பயிர்ச்சேதம் குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய நீர் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரதான நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டத்தின் அடிப்படையில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், விவசாயத்துக்கான நீரை வழங்குதல், எதிர்கால பயிர்ச்செய்கை திட்டங்கள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0