உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
63 பார்வைகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான இன்டர்போலின் ‘சிவப்பு பிடியாணை’ வெளியிடக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான உள்நாட்டு குற்றவியல் வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி நீதியமைச்சர் அகின் குர்லெக், நெதன்யாகு உள்ளிட்ட இருவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களாக அறிவிக்கும் வகையில் இன்டர்போல் சிவப்பு பிடியாணை விடுக்கக் கோரி உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் மொத்தம் 35 பேருக்கு எதிராக உயிரிழப்புகளை ஏற்படுத்துதல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் இந்த முயற்சி பயனற்றது என நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு.!

ஜப்பான் – டோக்கியோ நகருக்கு அருகில் இன்று (23) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தது 37…

83 0 0
உலக செய்திகள்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்…

78 0 0
உலக செய்திகள்

10 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து,…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள்…

71 0 0