உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் லேசர் ஒளிக்கீற்றினால் மாணவர்கள், அரச அதிகாரிகள் முதல் பொலிஸார் வரை பாதிப்பு!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
93 பார்வைகள்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம் காரணமாகக் கண்ணில் பாதிப்படைந்தவர்களில் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பொலிஸார், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் உள்ளிட்ட பல மாணவர்கள், அரச அலுவலகர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் உள்ளடங்குகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தின் உற்சவத்தின்போது ஆலயச் சூழலில் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகள் பயன்படுத்தப்பட்டமையே இந்தக் கண் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0