டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு.!
319/L இஞ்ஜஸ்ட்ரி கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கி வரும் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நேற்று 18 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் சமூக நல உத்தியோகத்தர் திருமதி நிர்மலா அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அமைப்பின் தலைவர் எஸ். குமாரவேல் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதன் அவசியம், சுற்றுப்புறச் சூழலை சுத்தமாகப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவரின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.



