உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
101 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவை இரண்டு வழக்குகளிலும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சந்தகல’ எனும் தொல்பொருளைத் திருடிய தனது மகனை விசாரணைகளிலிருந்து காப்பாற்றத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது முதன்மை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சி நடந்ததாகச் சுட்டிக்காட்டினர்.

எனினும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை எனக் எனக் கூறி, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் நிபந்தனையிலும் நீதவான் பிணை வழங்கினார்.

அத்துடன், ஊடக அமைச்சராக இருந்தபோது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 6 பேரை சட்டவிரோதமாகத் தனது தனிப்பட்ட ஊழியர்களாக நியமித்த இரண்டாவது வழக்கிலும், அவரைத் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0