உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை நிலையத்திற்குப் பூட்டு!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
87 பார்வைகள்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடை ஒன்று, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று (18.08.2026 – செவ்வாய்க்கிழமை) அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.

மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, குறித்த பலசரக்குக் கடையில் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பரிசோதகரால் இன்று களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த கௌரவ நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0