கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு.!
கற்பிட்டி, கந்தகுளிய அத்துருகுடாவ பகுதியில் கற்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கந்தகுளிய பகுதியைச் சேர்ந்த துஸ்மந்த ரோஹண என்ற 40 வயதுடைய மீனவரும், அவரது மகனான ரவீன் கனிஷ்க என்ற 6 வயதுச் சிறுவனும் என தெரியவந்துள்ளது.
தனது மகனுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.