உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொலித்தீனின் பயன்பாடு 10 மில்லியன் அலகுகளால் குறைத்துள்ளதாக தகவல்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
86 பார்வைகள்

நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0