மஸ்கெலியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு.!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளில் கனமழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள 15 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் வைத்து சுமார் 5000 பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் திரு.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் அடங்கலாக மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொதிகளை ஹெபி ஹோம் நிறுவனத்தின் முகாமையாளர் திரு. ரவீந்திரன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



