உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நவீன மயப்படுத்தப்படும் சாட்டிக் கடற்கரை!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
46 பார்வைகள்

சாட்டிக் கடற்கரையை அபிவிருத்தி செய்து, பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மாற்றி உல்லாசப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கும் நோக்கிலான செயற்றிட்டத்தின் கீழ், கடற்கரையின் நுழைவாயில் மற்றும் சுற்றுவேலி அமைக்கும் பணிகள் இன்று (14) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில், சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (14) பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சாட்டிக் கடற்கரையின் வீதிப் பகுதியிலிருந்து கடற்கரைப் பகுதிக்கான அணுகலை கட்டுப்படுத்தும் வகையில் கம்பி வலை அமைத்தல், நுழைவாயில் அமைத்தல் மற்றும் சாலையோரப் படிகளை நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தை நிறைவேற்று நிறுவனமாகக் கொண்டு, வேலணை பிரதேச சபையினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுமார் 73 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தித் திட்டப் பணிகள் எதிர்வரும் கார்த்திகை மாதத்திற்குள் முழுமையாக நிறைவுசெய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சாட்டிக் கடற்கரையின் பாதுகாப்பு மற்றும் அழகை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் அப்பகுதியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0