உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஒலிபெருக்கி பயன்பாட்டை குறைக்குமாறு பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
39 பார்வைகள்

தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறும், பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அறங்காவலர்களுக்கும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவர்கள், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டெம்பர் 04 ஆகிய திகதிகளில்) ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, தொழுகையையும் சேர்த்து பிற்பகல் 12:45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பரீட்சை நடைபெறும் நேரங்களில் குறிப்பாக, ளுஹர் மற்றும் அஸர் தொழுகை நேரங்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டின் அளவைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

முடிந்தவரை பள்ளிவாசலின் உள்ளக ஒலிபெருக்கிகளை (Internal Speakers) மட்டும் பயன்படுத்தி, மாணவர்கள் சிரமமின்றி பரீட்சை எழுதுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பள்ளிவாசல்களின் கதீப்மார்களுக்கும் முஅத்தின்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.”

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0