சவுதி இளவரசருக்கும் அமெரிக்க CENTCOM தளபதிக்கும் இடையே சந்திப்பு!
சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பீடத்தின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக சவுதி அரசு செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பரஸ்பர பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதோடு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
பொப் அல்-மந்தேப் நீரிணை (Bab al-Mandeb Strait), செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய கடல் வழிகளூடான போக்குவரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, சவுதி அரேபியாவினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு கூட்டமைப்பின் 3ஆவது திட்டமிடல் அமர்வு நேற்று சவுதியில் நடத்தப்பட்ட நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.