ஈரானின் கெஷ்ம் தீவு கடலோரப் பகுதியில் எண்ணெய் கசிவு!
ஓமான் அருகே மசகு எண்ணெய் தாங்கிப் படகில் (டேங்கர்) ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm Island) கடலோரப் பகுதியில் எண்ணெய் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி (Kazem Gharibabadi) தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளே இந்த மாசுபாட்டிற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
கடந்த ஜூன் மாதம் ஓமான் அருகே தரைதட்டியது முதல் ‘கேரோலின் பெசெங்கி’ (Caroline Bezengi) என்ற எண்ணெய் தாங்கிப் படகில் இருந்து கசிந்து வரும் மசகு எண்ணெய், சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளை அடையத் தொடங்கியுள்ளதாக ஓமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் வளைகுடா கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நிர்வகிப்பதற்கான ஒரு வழிமுறையை ஈரான் “வரையறுத்து அமுல்படுத்த” வேண்டியதன் அவசியத்தை மேலும் உணர்த்துவதாக காசிம் கரீபாபாடி சுட்டிக்காட்டியுள்ளார்.