உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருள் விநியோகம்; சிறைச்சாலை அதிகாரி கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
47 பார்வைகள்

கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கையின்போது, சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரின் ‘வாட்ஸ்அப்’ அழைப்பின் ஊடாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் போதைப்பொருட்களை சேகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருட்களை வனாத்த வீதியில் உள்ள மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் சேவையில் இணைந்துள்ளதுடன், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0