உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சாகர காரியவசம் கைது செய்யப்படுவார் என முன்கூட்டியே அறிந்திருந்தேன்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
59 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்படுவார் என்பதை தாம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சாகர காரியவசம் கைது செய்யப்பட்டது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் பொதுமக்களுக்கும் அரசுக்கும் சேவை செய்யாமல், அரசாங்கத்துக்கு மட்டுமே தொடர்ந்து சேவை செய்தால், பொலிஸாரை பொதுமக்கள் தாக்கும் அபாயம் அல்லது அத்தகைய தாக்குதலில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தண்டனைச் சட்டக்கோவையின் 113,186 மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான அம்சம் யாதெனில், தண்டனைச் சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவானது அரசருக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதைப் பற்றியே குறிப்பிடுகிறது.

இதன் மூலம் இந்நாட்டிற்கு அரசர் ஒருவர் தோன்றி உள்ளார் என்பதை இந்த கைதின் வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அரசருக்கு ஜெயம் உண்டாகட்டும் என வாழ்த்துவதா இல்லையா என்று நான் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது வீட்டில் அழ வேண்டாம் என்று கூறத் தொடங்கியுள்ளனர், அதனால் யாரும் அழப்போவதில்லை.

சாகர காரியவசம் இங்கு இருந்து செல்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்படுவார் என்பதை நாம் அறிந்திருந்தோம்.

இதன்போது பொலிஸார் சாகர காரியவசமிடம் அவரது தொலைபேசி எங்கே என்று வினவினர். அதற்கு அவர், தான் கைது செய்யப்படப்போவது தெரியும் என்பதால் தொலைபேசியை எடுத்துவரவில்லை என்று பதிலளித்தார்.

இவ்வாறு தான் கைது செய்யப்படப்போவதை அறிந்தே அவர் வந்திருந்தார், இருப்பினும் அவரது மனதில் எவ்வித சலனமோ அல்லது பயமோ காணப்படவில்லை.

323 கொள்கலன் மோசடி, 2.5 மில்லியன் டொலர் மோசடி அல்லது நிலக்கரி மோசடி ஆகியவற்றுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், எனது சொத்துக்கள் திடீரென அதிகரிக்கவில்லை என்றும் அவர் மிகவும் தெளிவாகக் கூறினார்.

எனவேதான் பெருமையுடன் பொலிஸ் நிலையத்துக்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டுச் சென்றார் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0