மட்டக்களப்பில் இரண்டு கட்புலனற்ற மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்
இன்று நாடுமுழுவதும் ஆரம்பமாகியுள்ள கல்வி பொது தராதர பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கண்பார்வையற்ற மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளின் பரீட்சை மண்டபங்களிலும் இப்பார்வையற்ற மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதுகின்றனர்
மட்டக்களப்பு கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் இம்மாணவர்கள் சாதாரண தர பரீட்சையிலும் தரிசனம் பாடசாலையிலிருந்தே பரீட்சைக்கு தோற்றிய சித்தியடைந்தவர்கள் ஆவர்
குறிபிட்ட மானவர்களை பரீட்சை நிலையங்களுக்கு இன்று காலை அவர்களுடைய உறவினர்கள் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது