உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவில் சிவில் சமூக தளத்தைப் பாதுகாக்கக் கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
142 பார்வைகள்

இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் செயற்பாடுகளை பாதிக்கக்கூடிய வகையில் முன்மொழியப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டின் புதிய சட்ட வரைபு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று (10.08.2026) திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றது.

விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சிவில் செயற்பாடுகளின் மீது அரசுக்கு அளப்பரிய அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைபு தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், சட்டத்தின் சாத்தியமான தாக்கங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்புகள் சிவில் சமூக தளத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமன்றி கிராம மட்டங்களில் செயற்படும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களும் இச்சட்டத்தின் தாக்கத்திற்கு உட்படக்கூடிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் சமூக அமைப்புக்கள் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படுவதன் மூலம் அவற்றின் சுயாதீன செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தை மிகக் குறுகிய காலத்திற்குள், குறிப்பாக 19 நாட்களுக்குள் அமுல்படுத்துவதற்கான அவசரம் ஏன் என கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டத்தை இவ்வாறு அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன், இதன் பின்னணியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் முன்மொழியப்பட்டுள்ள சட்டம் தொடர்பான தகவல்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளதால், கிராம மட்டங்களில் உள்ள சாதாரண மக்கள் அதன் உள்ளடக்கத்தையும் தாக்கங்களையும் புரிந்துகொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளையும் எதிர்க்குரல்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றனவா என்ற கேள்வியும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

எனினும் சட்டத்தின் உண்மையான நோக்கம் அதன் நடைமுறைப்படுத்தல் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சுயாதீன செயற்பாடுகளின் மீதான தாக்கம் ஆகியவை தொடர்பில் விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தரணி குகதாசன் ஜங்கரன் வளவாளராகக் கலந்து கொண்ட இவ்விழிப்புணர்வு கலந்துரையாடலில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விசேட தேவையுடைய நபர்கள், கிராம மட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0