உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
82 பார்வைகள்

காலி, பிட்டிகல – நியாகம, உடகங்வத்த பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காரியவசம மாஜுவான கமகே நுவன் சுரங்க டயாஸ் என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

கடந்த முதலாம் திகதி இரவு குறித்த தம்பதியினர், பிட்டிகல பிரதேசத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று அங்கு சிறிது நேரம் தங்கியிருந்த பின்னர், தமது வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்டபோது, இரவு சுமார் 10 மணியளவில் அவர்களை இலக்கு வைத்து அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 41 வயதுடைய அவரது மனைவி குமாரி எதித்சிங்க கொடித்துவக்கும் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அசிட் தாக்குதலில் காயமடைந்த இருவரும் முதலில் நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட பணத் தகராறு காரணமாக இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை இருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0