உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

50 பார்வைகள்

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும், தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த வேளையில் சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், பாரவூர்தியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவருமாக மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை – ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37, 36 வயதுடையவர்கள் ஆவார்.

இதேவேளை, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான சொகுசு ஜீப் வாகனத்தை இளைஞர்கள் குழுவொன்று ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுப் பயணித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஜீப் வண்டியும் பாரவூர்தியும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாத்தறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; ஐவர் உயிரிழப்பு.!

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார்…

13 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக…

14 0 0
இலங்கை செய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட பேருந்துகள் சோதனை.!

நுவரெலியாவில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நேற்று திங்கட்கிழமை (20) மாலை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். நுவரெலியா…

14 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

16 0 0