தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; ஐவர் உயிரிழப்பு.!
ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
தீயணைப்புப் பணிக்காக கோட்டே மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத் தீ விபத்தின் போது 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

