உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
39 பார்வைகள்

நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இதுவரை 77,028 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றது.

டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய கண்காணிப்புத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 21,650 வழக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இது ஜூன் மாதத்தில் பதிவான 21,537 வழக்குகளை விடக் கூடுதலாகும்.

தென்மேற்கு பருவமழைக்காலம் காரணமாக, இந்த இரு மாதங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் பாதியளவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண ரீதியில், மேல் மாகாணம் தொடர்ந்து டெங்கு பரவலின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு 40,573 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹாவில் 16,164 டெங்கு நோயாளர்களும் கொழும்பில் 15,341 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 11,867 டெங்கு நோயாளர்களும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தலா 6,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற சிறிய மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தபோதிலும், இந்நோய் நாடு முழுவதும் பரவியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

28 வது வாரக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதிலும் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாயம் கொண்ட பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

தினசரி நள்ளிரவுக் கணக்கெடுப்பின்படி சராசரியாக 2,652 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும், டெங்கு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் வைத்திய ஆலோசனைகளைப் பெறுமாறும் பொது சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைத் தொடர்ந்து கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமஷ்டியைத் தருவதாகக் கூறி ஜனாதிபதி தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவில்லை!

சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன் அடிப்படையிலேயே மக்கள் அவரை ஆதரித்துள்ளனர் எனவும்…

42 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விண்ணப்பம்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது.…

17 0 0
இலங்கை செய்திகள்

துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். துருக்கித் தூதரகத்தில், தூதுவரின் உத்தியோகபூர்வ…

9 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

60 0 0