உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

47 பார்வைகள்

அனுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தர குளம் பகுதியில் உள்ள கற்குவியல்களுக்கு நடுவில் நீர் நிரம்பியிருந்த பகுதியில், நேற்று மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சடலம் மீட்கப்பட்டபோது, அது மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் இருந்தது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அந்தர குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபராவார்.

இந்தச் சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; ஐவர் உயிரிழப்பு.!

ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார்…

12 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக…

14 0 0
இலங்கை செய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட பேருந்துகள் சோதனை.!

நுவரெலியாவில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நேற்று திங்கட்கிழமை (20) மாலை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். நுவரெலியா…

14 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

16 0 0