உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு; சில பொலிஸ் அதிகாரிகளும் ஆதரவு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
67 பார்வைகள்

நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், கெசல்கமு ஓயாவிற்கு அருகில் உள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் இடம்பெற்று வரும் பாரிய சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வினால் பாரிய சுற்றாடல் அழிவு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த (15) ஆம் திகதி இரவு NC தேயிலைத் தோட்டத்தில் தேயிலைச் செடிகளைப் பிடுங்கி, அதன் கீழ் இருந்த இரத்தினக்கல் படிமங்களை ஒரு குழுவினர் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இத் தேயிலை தோட்டத்தில் பல தேயிலை செடிகளை அகற்றி பாரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் அங்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் கெசல்கமு ஓயாவுக்கு அருகில் உள்ள போர்ட்ரீ தோட்டத்திலும் இரவு நேரங்களில் 200 க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த சட்டவிரோத இரத்தினக் கற்கள் அகழ்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இவ்வாறான சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டு வரும் இரத்தினக் கற்கள் அகழ்வோருக்கு பொலிஸாரின் ஆதரவு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பண்டார ராஜநாயக்கவிடம் வினவிய போது, சந்தேகநபர்களை கைது செய்ய கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.

எனினும், சட்டவிரோதமாக முறையில் இரத்தினக் கற்களை அகழ்வோரை கைது செய்ய பொலிஸ் நிலையத்திலிருந்து அகழ்வு நடைபெறும் இடம் வரை காவலாளிகளை நிறுத்தியுள்ளதாகவும், நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் சில அதிகாரிகளின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைப்பதனால் இவர்களைக் கைது செய்வது கடினமாக உள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

விசேட நடவடிக்கை தொடர்பில் ஹட்டன் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரதீப் வீரசேகரவிடம் வினவிய போது, வலய ஊழல் தடுப்புப் பிரிவினரை (Anti-Corruption Unit) ஈடுபடுத்தி இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சட்டவிரோத இரத்தினக் கற்கள் அகழ்வு தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரம்.!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒன்றிணைந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு’ நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 2 இலட்சத்து…

44 0 0
இலங்கை செய்திகள்

கைதிகள் பல மடங்கு அதிகம்; அதிகாரிகள் மிகவும் குறைவு.!

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்படுவதாலும், கொள்ளளவை மீறிய வகையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாலும், ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும் பாதுகாப்பும்…

60 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களின் உத்தரவிற்கமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் I) ஏ.ஜி.…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட மலர்ச் செடிகள்; பெண் ஒருவர் கைது.!

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்திவரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

72 0 0