போதைப்பொருட்களுடன் இருவர் அதிரடியாக கைது.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 14 ஆம் திகதி மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் வைத்து இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயதுடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஆவர்.
அவர்களிடம் இருந்து முறையே 3,290 மில்லிகிராம் ஜஸ், 360 மில்லிகிராம் ஹேஸ் எனப்படும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளையில் இந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று 15 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.