உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

தாய்லாந்து கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலக செய்திகள் 1 நாள் முன்
93 பார்வைகள்

தாய்லாந்து பாங்கொக் நகரில் மதுபான விடுதியில் தீவிபத்து ஏற்பட்டமைக்கு கவனக்குறைவே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இந்த தீவிபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 27 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சுமார் 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கடந்த 12 ஆம் திகதி இரவு தீடீர் தீவிபத்து ஏற்பட்டது.

மதுபான விடுதியில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவே தீவிபத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது

அத்துடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களினால் குறித்த மதுபான விடுதி அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் கதவுகள் மூடப்பட்டிருந்ததுடன் அவசரகால வெளியேறும் முனையம் என்பன பூட்டப்பட்டிருந்தமையினாலேயே உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த துயரசம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 27 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் சுமார் 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அத்துடன் குறித்த மதுபான விடுதி உணவகம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இது களியாட்டவிடுதியாக இயங்கிவந்துள்ளதாக பாங்கொக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனக்குறைவான அலட்சிபோக்கே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள களியாட்ட விடுதிகள் அரங்குகள் மற்றும் உணவகங்களின் கட்டுமானம் மற்றும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பரிசீலனை செய்து வருவதாக பாங்கொக் உட்கட்டமைப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம்!

நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூசிலாந்தின் மோட்டார்…

60 0 0
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!

எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து,…

74 0 0
உலக செய்திகள்

ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான…

84 0 0
உலக செய்திகள்

ஈரானில் பிரித்தானிய நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிரேக் ஃபோர்மேன் ( Craig Foreman ) என்ற பிரிட்டிஷ் பிரஜைக்கு, மேலும் 2…

91 0 0