உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பாதாள உலகக் குழுக்களோடு எப்போதும் ராஜபக்ஷக்களுக்குத் தொடர்பு உண்டு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

“சிறைச்சாலைகளில் போதுமான வசதிகள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சொந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு புலம்புவது நியாயமானதே” என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் காரசாரமாகத் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் என்று குறிப்பிடும் போது, ஏதாவது ஒரு வழியில் ராஜபக்ஷக்கள் அவர்களுடன் தொடர்புப்பட்டிருப்பதே உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது,
“தற்போது நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிராக அரசால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள், அரசின் இந்த வேலைத்திட்டங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்குப் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எனினும், அவர்களின் அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தடுப்பதற்கு நீதி அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்துகின்றார். ஆனால், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு நீதி அமைச்சர் தெளிவான விவரங்களை வழங்கியுள்ளார். இதில் எதனையும் மறைக்க வேண்டிய தேவை தற்போதைய அரசுக்கு இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தங்காலை சிறைச்சாலையில் பாரிய கலவரம் ஒன்று ஏற்பட்டது. அப்போது கலவரத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஜூலம்பிட்டியே அமரே’ என்பவரைப் பார்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு சென்று, ‘அமரே நான் வந்துவிட்டேன், கலவரத்தை நிறுத்து’ என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார். உடனடியாக அந்தப் பாதாள உலகக் குழு உறுப்பினர் கலவரத்தை நிறுத்தினார். இதுதான் இவர்களது பின்னணி.

ஆனால், தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைக்குச் சென்று, மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று எவரையும் பெயர் குறிப்பிட்டு எந்தவொரு பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அழைக்கவில்லை. நாட்டின் தற்போதைய சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முறையான மற்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0