உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இனி டெங்கு கொசுக்களைக் கூட சிறையில் அடைக்கும் இந்த அரசு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

“தற்போதைய திசைகாட்டி அரசுக்கு நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்குத் தேவையான எவ்விதப் பொருளாதார அல்லது அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் கிடையாது. அரசியல் எதிரிகளைத் தேடிப் பிடித்துச் சிறையில் அடைக்கும் ஒரேயொரு வேலைத்திட்டம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்த மோசமான போக்கு நீடித்தால், இறுதியில் நாட்டின் விவசாயிகளையும், ஏன் டெங்கு கொசுக்களைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய விசித்திரமான நிலையே ஏற்படும்” – என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சன்ன ஜயசுமன கடுமையாகக் கேலி செய்துள்ளார்.

காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தே ஜனாதிபதிகள் உருவானார்கள். ஆனால், இனிவரும் காலத்தில் இந்த நாட்டின் அடுத்த தேசிய தலைமைத்துவம் இந்த வீரமிக்க காலி மாவட்டத்தில் இருந்தே உருவாகும் என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

இடதுசாரிக் கொள்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தீவிர தேசப்பற்று மற்றும் அச்சமற்ற அரசாங்கம் போன்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்தே இந்த அரசு கடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று இவர்களிடம் எவ்வித ஏகாதிபத்திய எதிர்ப்போ அல்லது தேசப்பற்றோ எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் தேசிய வளங்கள் அனைத்தையும் இன்று அண்டை நாடான இந்தியாவுக்கும், மேற்கத்தேய நாடுகளுக்கும் தாரைவார்த்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களை இடதுசாரிகள் என்று பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்தாலும், நடைமுறையில் தீவிர வலதுசாரி அரசியல் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளையே இவர்கள் அச்சுப்பிசகாமல் பின்பற்றுகின்றார்கள். இந்த நாட்டின் அடித்தட்டு சாதாரண மற்றும் மிக வறிய விவசாய மக்கள் இன்று இந்த அரசினால் முழுமையாக மிதிக்கப்பட்டு, நாசம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தற்போது ஒடுக்கப்பட்டுள்ள விவசாய மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் பிரதான அரசியல் சக்தியாக எமது சர்வஜன அதிகாரம் கட்சி மாறியுள்ளதுடன், அதன் தலைமைத்துவத்தை திலித் ஜயவீர ஏற்றுக்கொண்டுள்ளார். நெல், காய்கறி, உருளைக்கிழங்கு, தேயிலை, கறுவா என அனைத்துப் பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று நட்டமடைந்து நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் எதிர்கால அரசின் கீழ், இந்த நாட்டின் உழைக்கும் விவசாய மக்களை நிச்சயமாகத் தேசிய தலைமைத்துவத்துக்குக் கொண்டு வருவோம். இந்த வறண்ட பூமியோடு போராடுகின்ற விவசாய மக்களைத் திலித் ஜயவீரவின் தலைமையில் நிச்சயமாக ‘நாட்டின் ராஜாக்களாக’ மாற்றுவோம். அவர்களுக்குச் சமூகத்தில் கிடைக்க வேண்டிய உன்னதமான இடத்தை நாம் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0