உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அநுரவுக்கும் கோட்டாவின் கதியே ஏற்படும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசானது, எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை மாத்திரமே இலக்காகக் கொண்டு, அரிசி விநியோகத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அரச ஊழியர்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கு இந்த அரசுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது போலும். இவ்வாறான பைத்தியக்காரத்தனம் உலகத்தில் எங்குமே இல்லை.

அழகான, தூய்மையான, பெரும் பணக்கார இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்தவர்கள், இன்று அரச ஊழியர்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கவா நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்? தற்போது நாடு அவ்வாறான நிலையை அடைந்துள்ளதா? அவ்வாறாயின் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணங்கள் எங்கே? சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் ஏனைய கடன் உதவிகள் மூலமும் பெறப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? அவை எதற்கும் இந்த அரசிடம் பதில் இல்லை.

அரசுக்கு அரச ஊழியர்களின் பசியைப் பற்றி மாத்திரமே கவலை உள்ளது. ஏழைக் கிராமங்களில் வாழும் ஏனைய மக்களுக்குப் பசி இல்லையா? அவர்கள் உணவு உண்பதில்லையா? அல்லது அவர்கள் புண்ணாக்கா உண்கின்றார்கள்? அரச ஊழியர்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த அரிசிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரச ஊழியர்கள் அந்தளவுக்குப் பிச்சைக்காரர்கள் அல்லர், ஆனால் இந்த அரசு அவர்களைக் கையேந்திப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

ஏழைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கோ அல்லது விவசாயிகளிடமிருந்து நெல்லை முறையான விலைக்குக் கொள்வனவு செய்வதற்கோ அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு உடனடியாக மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கிப் போராடுவது நிச்சயம். அன்று கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குப் போகுமாறு கூறியதைப் போல், அநுரகுமார திஸாநாயக்கவையும் வீட்டுக்குப் போகுமாறு கூறி மக்கள் வீதிக்கு இறங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0