உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ஜூலையில் ‘இளைஞர் சங்கமம்’ நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தலைநகரில் தனித்தன்மை வாய்ந்த, நீண்ட கால கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளைக் கொண்டு இயங்கி வரும் ‘புதிய அலை கலை வட்டம்’, தனது இளைஞர் அணியின் மேம்பாட்டை மேலும் கட்டமைக்கும் நோக்கில் ‘இளைஞர் சங்கமம்’ என்ற விசேட நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் 05ஆம் திகதி இந்த மாபெரும் சங்கம நிகழ்வு நடைபெறவுள்ளது என்று அமைப்பின் நிறுவுநர் ராதாமேத்தா தெரிவித்துள்ளார்.

புதிய அலை கலை வட்டமானது கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தனது இளைஞர் அணியை உருவாக்கி, வளர்ந்து வரும் கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்குச் சிறந்ததொரு களத்தை அமைத்துக் கொடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு முதல் இளையோருக்கான பட்டிமன்றம், கலை – இலக்கியப் போட்டிகள் மற்றும் மாதாந்த ஹைக்கூ கவியரங்கம் உள்ளிட்ட பல பயனுள்ள நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ‘இளைஞர் சங்கமம்’ நிகழ்வில், பங்குபெறும் இளையோரின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிப் பாசறைகள் அமைக்கப்படவுள்ளன.

இதன்படி, கலை மற்றும் இலக்கியம், ஊடகத்துறை, விவாதம் மற்றும் பேச்சுக்கலை, விளையாட்டுத்துறை சார்ந்த விசேட பயிற்சிகளை வழங்கும் ஆக்கபூர்வமான களங்கள் இதன்போது உருவாக்கப்படவுள்ளன.

இந்தத் தனித்துவமான களத்தில் இணைந்து கொண்டு, தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் கலை, இலக்கிய, ஊடக ஆர்வமுள்ள இளையோர் உடனடியாக 075 4880172 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0