உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சஜித் அணியின் உறுப்பினர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொ*லை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும், அந்தக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் அணியின் ஊடகச் செயலாளராகவும் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லஹிரு சுபுன் சிந்தகா என்ற இளைஞரே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற மது விருந்தொன்றின் போது, அங்கு குழுமியிருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, இந்த இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த லஹிரு சுபுன் சிந்தகா, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வீரகெட்டிய பிரதேச சபைக்குப் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அவர் களமெட்டிய மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்பிடித்துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மேலாண்மை உதவியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0