உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பிலியந்தலை – மகரகம பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அரவ்வல பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒன்று, பிலியந்தலை – மகரகம வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, தனக்கு முன்னால் சென்ற ஓட்டோ ஒன்றை அதிவேகமாக முந்திச்செல்ல முயன்றுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக எதிரே அதிவேகத்துடன் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் அது மிக உக்கிரமாக மோதியுள்ளது.

அவ்விடத்தில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் இருந்த மின்சாரக் கம்பம் ஒன்றிலும் மிக பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தின் போது தூக்கி வீசப்பட்டுத் தலை மற்றும் உடல் பாகங்களில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 16 வயதுடைய மாணவன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேவேளை, இந்த விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுமுறை காரணமாகவே இந்த இளம் உயிர் பறிபோயுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0