உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காதல் விவகாரம் – நபர் ஒருவர் நடுரோட்டில் வெடிக்கொ*லை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மாத்தறை மாவட்டம், வெலிகமை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இளம் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை கூர்மையான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் காதல் விவகாரம் காரணமாகவே அரங்கேறியுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவத்தில் வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிகமை நகரில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் மேற்படி இளைஞர், நேற்று தனது பணி நிமித்தமாக வீதியில் நடமாடிக் கொண்டிருந்த போதே, அங்கு மறைந்திருந்த ஆயுததாரிகளான இருவரால் திடீரென வழிமறிக்கப்பட்டுத் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார்.

கழுத்து மற்றும் உடல் பாகங்களில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய அந்த இளைஞர், அதிகளவிலான இரத்தப் போக்குக் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த இளைஞருக்கும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் நிலவி வந்த நீண்டகாலக் காதல் விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதமே இந்தத் திட்டமிட்ட படுகொலைக்குப் பிரதான காரணம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காகப் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரப் படுகொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடியுள்ள சந்தேகநபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களைக் கைது செய்வதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.kq

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0