உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
50 பார்வைகள்

வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வவுனியா மாநகரசபையின் முதல்வரை, முதல்வர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான நடவடிக்கை.

மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை இவ்வாறு பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நிலை உருவானால், தேர்தல் முறையின் அர்த்தமும் மக்களின் ஆணையின் மதிப்பும் கேள்விக்குறியாகின்றன.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்திருந்தால் அவை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு அறிவிக்கப்படாமல் ஒருதலைப்பட்சமான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

தமிழர் தரப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மீது அதிகாரத்தின் மூலம் அழுத்தம் செலுத்தப்படுவது, தமிழர்களுக்கு எதிரான பாகுபாடான அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே நாம் கருதுகின்றோம்.

எனவே, மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து 29.06.2026 அன்று முழுநேர கடையடைப்பும், அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்தில் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0