ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற கும்பலை சேர்ந்தவரான நந்துன் சிந்தக்க எனப்படும் ஹரக் கட்டாவை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உத்தரவுகளில் இருந்து விடுவித்து, வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயற்பாட்டிற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து சாதாரண கைதியாக வைத்திருப்பதற்காக, 1,200 இலட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.