உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டத்தில் மீண்டும் கரும்புச்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டு குறித்த செய்கையை ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர்.

யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.சிவசங்கர், விவசாய ஆராய்ச்சி மேலதிக பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்கண்ணா, மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் பி.புஸ்பராணி, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.பிரகாஸ், Natural Roots நிறுவனத்தின் பணிப்பாளர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

20 விவசாயிகளை தெரிவு செய்யப்பட்டு 20ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த கரும்பினை Natural. Roots விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0