உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக் கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

SLASSCOM நிறுவனத்தின் அனுசரணையுடன், தேசிய ரீதியிலான இந்த வருடத்துக்கான விருது வழங்கும் விழா கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ‘ITC ரத்னதீப’ நட்சத்திர விருந்தினர் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

SLIIT Northern Uni நிறுவனத்தின் நான்காம் வருட தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் குழுவொன்றே இந்த உயரிய தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளது.

தேனுஜன், மிதுஜனா, யதுட்சன் மற்றும் சகிசன் ஆகிய மாணவர்கள் குழுவே இந்த விருதை வென்றுள்ளனர்.

கலாநிதி பிரசன்னா சுமதிபால மற்றும் திருத்தணிகேசன் ஆகிய விரிவுரையாளர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்படி மாணவர்கள் குழுவினர் தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளனர்.

விரிவுரையாளர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ், மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பப் புத்தாக்கமே தேசிய மட்டத்தில் சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டு இவ்விருதை வென்றுள்ளது.

இலங்கையின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை அமைப்பான SLASSCOM நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருதானது, நாட்டின் மிக உயரிய புத்தாக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0