பெருந்தொகை கோடாவுடன் இருவர் கைது.!
சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை கோடாவுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (18) வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹீனடியன, பகுதியில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த 1134 லீற்றர் கோடா மற்றும் 1512 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 52 வயதுடைய மினுவாங்கொடை பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.
கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.