உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சர்வதேச அவதானத்துக்கு மத்தியில் இன்று செம்மணியில் நீதி அமைச்சர்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் உயர் பிரதானிகள் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விசேட விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்று முன்னெடுக்கப்படும் இந்த விஜயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் நேரில் சென்று பார்வையிடுவதற்கான சட்டபூர்வ அனுமதியைக் கோரி, கடந்த 16ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் சட்டத்தரணிகளால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசேட நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அன்றைய தினம் பிற்பகலே இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை நீதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கியிருந்தது.

நீதிமன்ற அனுமதியின் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு நேரில் வருகை தரவுள்ளனர்.

இதன்போது, அங்கு தற்போது இடம்பெற்று வரும் மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாராய்ச்சிகள், என்புத் தொகுதிகள் மீட்புப் பணிகள் மற்றும் சான்றுப் பொருட்கள் சேகரிப்பு நடைமுறைகளை அவர்கள் நேரில் பார்வையிட்டு, அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இலங்கையில் மனிதப் புதைகுழி விவகாரங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச ரீதியில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள பின்னணியில், நீதி அமைச்சரின் இந்தச் செம்மணி விஜயம் அரசியல் மற்றும் சட்டத் துறையினரிடையே பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

49 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0