உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான சுரேன் ராகவன், வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான ரில்வின் சில்வா ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்நேரத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் அடுத்தகட்டப் போராட்டங்களில் இறங்குவதற்கு முன்பதாக, எம்மால் கொடுக்கக்கூடிய அனைத்து அரசியல் அழுத்தங்களையும் தற்போதைய அரசுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

எனவே, வரும் 30 நாள்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.

இதேவேளை, அண்மையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி தற்போதைய அரசின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டொன்றைச் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, தற்போதைய அரசானது புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், விடுதலைப்புலிகளுக்குச் சார்பான அமைப்புகளிடமிருந்தும் நேரடியாகப் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், லண்டனில் இவ்வாறான நிதியைப் பெற ஜே.வி.பி. தரப்பு முயன்ற போதே அங்குள்ள அமைப்புகள் அதனை நிராகரித்துவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரமானது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பில் மிக ஆபத்தானது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ரில்வின் சில்வா ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வந்து மக்களுக்குப் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டும்.

பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்தோ அல்லது விடுதலைப் புலிகளுக்குச் சார்பான இயக்கங்களிடமிருந்தோ தற்போதைய அரசு எந்தவித நிதியையோ அல்லது உதவிகளையோ பெறவில்லை என்பதை அவர்கள் நாட்டுக்கு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு அரசால் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாவிட்டால், இந்த அபாண்டமான குற்றச்சாட்டைப் பகிரங்கமாகச் சுமத்திய குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” – என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0