உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் தொடருந்துடன் மோதி
இராணுவச் சிப்பாய் பலி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாணம், அரியாலை – நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட காலமாக மீண்டும் கடமைக்குத் திரும்பாமல் இருந்துள்ளார். இந்நிலையிலேயே, அவர் நீண்ட நாள்களின் பின்னர் இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்குச் சென்று கடமையைப் பொறுப்பேற்க முயன்றுள்ளார்.

இதன்போது, உரிய கால எல்லையைத் தாண்டி நீண்ட நாள்கள் கடமைக்குத் சமூகமளிக்காமை குறித்துப் பலாலி முகாமின் உயர் இராணுவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்துக்கு நேரில் சென்று உத்தியோகபூர்வமாக விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் அவருக்குப் பணித்துள்ளனர்.

அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய அந்தச் சிப்பாய், மதியமளவில் அரியாலை – நெளுக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பாதையினூடாகப் பயணித்த ரயிலுடன் மோதியே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தலைமையகத்துக்குச் சென்று விளக்கம் கொடுக்கப் பணித்தமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

47 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0