தகாத உறவு தொடர்பில் மனைவியிடம் கேள்வி எழுப்பிய கணவர் கொடூரமாக தாக்கப்பட்டார்!
முல்லைத்தீவு மாவட்டத்தில், மனைவியின் தகாத உறவு தொடர்பில் கேள்வி எழுப்பிய கணவர் ஒருவர் கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் இராம மோகனதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது மனைவி ரெங்கையா சுதர்ஷினியிடம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரச் சென்றபோது, அவர் மற்றும் அவரது சகோதரரான ரெங்கையா ஸ்ரீரெங்கன் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் இராம மோகனதாஸின் கால்கள் முறிந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் இதுவரை உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.