உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தகாத உறவு தொடர்பில் மனைவியிடம் கேள்வி எழுப்பிய கணவர் கொடூரமாக தாக்கப்பட்டார்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மனைவியின் தகாத உறவு தொடர்பில் கேள்வி எழுப்பிய கணவர் ஒருவர் கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் இராம மோகனதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது மனைவி ரெங்கையா சுதர்ஷினியிடம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரச் சென்றபோது, அவர் மற்றும் அவரது சகோதரரான ரெங்கையா ஸ்ரீரெங்கன் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் இராம மோகனதாஸின் கால்கள் முறிந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் இதுவரை உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0