உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணி புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தப் புதைகுழியாக மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழியே முதலிடத்தில் காணப்படுகின்றது.

அந்த அடிப்படையில் நோக்கினால், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையின் படி, செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையின் இரண்டாவது பெரிய அகழ்வுத் தளமாகவே தற்சமயம் காணப்படுகின்றது.

ஆயின், திட்டமிட்டு மனித உடல்கள் புதைக்கப்பட்ட ‘அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி’ என்ற சட்ட ரீதியான கோணத்தில் பார்த்தால், செம்மணி மனிதப் புதைகுழியே இலங்கையின் மிக அதிக எண்ணிக்கையான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழித் தளமாக இன்று உருவெடுத்துள்ளது.

குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வளவு அதிகமான எலும்புக்கூடுகள் இங்கு கண்டெடுக்கப்படுகின்றமை சாதாரணமான ஒன்றல்ல. இது இப் பிரதேச மக்கள் மத்தியிலும், குறிப்பாகத் தங்களது உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியிலும் மிகப்பாரிய சந்தேகங்களையும், அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது.

எவ்வாறெனினும், இப்பகுதியின் ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளும் நிறைவடைந்து, முறையான அறிவியல் மற்றும் சட்டபூர்வ விசாரணைகள் முழுமையாக முற்றுப்பெற்ற பின்னரேயே, இது சம்பந்தமான இறுதி முடிவுகளையும் உண்மைகளையும் எம்மால் துல்லியமாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0